Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு: கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த சசிகலா இன்று (ஜன.,31) பெங்களூரு
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா
சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலா முழுமையாக குணமடைந்து, வீடு திரும்புவதற்கான உடல் தகுதி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டார். வீட்டில் ஒரு வாரத்திற்கு தனிமைபடுத்தி கொள்ள அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. சசிகலா டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக மருத்துவமனை முன்பு அமமுக.,வினர் குவிந்தனர். இதனையடுத்து
மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சசிகலாவை அழைத்து சென்ற காரில் அதிமுக கொடி
கட்டப்பட்டிருந்தது.
தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, தேவனஹல்லி அருகே உள்ள கோடாகுருக்கி பகுதியில்
இருக்கும் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கியிருக்கும் சசிகலா, பிப்.,3 அல்லது 5ம் தேதி சென்னை திரும்ப
உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.